Sunday 7 February 2021

சார்வரி வருடம் தை அமாவாசை திருநாங்கூரில் 11 கருட சேவை வைபவம் 12-FEB-2021




 


 நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் தை அமாவாசை (12-FEB-2021) கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளன.


வைணவ சம்பிரதாயத்தில் 'பெரிய திருவடி' என்று பக்தர்களால் அழைக்கப்படும் கருடாழ்வார் மீது இறைவன் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை' எனப்படும். கருட சேவையை தரிசித்தால் பல புண்ணிய பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. 


திருநாங்கூரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இந்தத் திருத்தலத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசையைத் தொடர்ந்து கருட சேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்துக்கான கருட சேவை (12-FEB-2021) உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளன.. ஒரே நாளில் 11 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பதே இதன் சிறப்பாகும். 

12-FEB-2021 மதியம் 1.30 மணியளவில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திருக்கோயில்களிலிருந்து 11 பெருமாள் உற்சவமூர்த்திகள் திருநாங்கூரில் எழுந்தருளினர். ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோயில்),  ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோயில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய பதினொரு திவ்ய தேசங்களைச் சேர்ந்த இறைமூர்த்திகளும் மணிமாடக் கோயில் உள்ள பந்தலில் எழுந்தருள்வார் பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி ஒவ்வொரு பெருமாளிடம் சென்று மங்களா சாசனம் நடைபெற உள்ளன.

இதைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி நடைபெற உள்ளன. திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருள்வார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற உள்ளன. 13.2.21 மாலை திருவெள்ளக்குளம், திருத்தேவனார்தொகை, திருவாலி ஆகிய தலங்களில் திருமங்கையாழ்வார் எழுந்தருள, திருப்பாவை, திருமஞ்சன சாற்றுமறையும் நடைபெற உள்ளன. பின்னர், ஆழ்வார் திருநகரியை அடைந்த பிறகு ஸ்ரீவயலாலி மணவாளன் கருட சேவையும், திருமங்கையாழ்வார் மங்களா சாசனமும் நடைபெறும்.


The uniqueness of this festival is that all the 11 emperumans are giving darshan in garudavahana, Sri. Thirumangai azhwar in hamsavahana led by Sri. Manavalamamunigal in seshavahana in one row through the streets of Thirunangur that cannot be seen anywhere else. Our seven emperumans are part of the 11 emperumans. Please note that the 11 Garuda Seva committee is functioning to meet out the festival expenses. However the below expenses are not covered or covered partially covered by the committee and we seek your financial assistance for our 7 temples.


I request you to select any one of the above item either in part or in full and may send your donation in the name of the T.V.V.S.S.K.TRUST , and mail to 4/83-A, Sri.Purushothama Perumal Koil Street, Nangoor, Sirkali-Tk. You may transfer the funds to trust.

  1. SB A/C No.608801152764, ICICI, Bank, Mailaduthurai Branch, Code No.6088, IFSC Code no.ICIC0006088
  2. SB A/c No.6027064799, Indian Bank, Thenapthi Branch Code No.S108, IFSC Code No: IDIB000S108




No comments:

Post a Comment