Wednesday 24 February 2021

பெரிய திருமொழி - திருமங்கையாழ்வார்

 



(1248)

போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள்

தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்

மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு

தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1249)

யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய்

மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம்,

மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை

தேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1250)

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்

தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்,

ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள்

தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1251)

இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த

சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்,

எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை

சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1252)

அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும்

உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம்,

தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல்,

திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1253)

ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத

பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம்,

சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல்

சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1254)

ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை

வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம்,

ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1255)

வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான்,

காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம்

ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1256)

கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவீழ

கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம்,

வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள்,

செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.

விளக்க உரை

(1257)

காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம்,

சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல்

கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்

ஏரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே


(1258)

கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்

அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்

செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1259)

பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில்,

ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில்,

நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம்,

வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1260)

அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்

உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,

கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,

வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1261)

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு,

ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில்,

கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி

மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1262)

சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்

ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,

ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்

மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1263)

அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த,

கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில்,

கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள்,

மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1264)

உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை

அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில்,

இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்கை

வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1265)

வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க

மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்

பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்

வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1266)

இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்

உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,

குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,

மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1267)

மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,

அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,

பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்

எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே.

(1258)

கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்

அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்

செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்

வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1259)

பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில்,

ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில்,

நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம்,

வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1260)

அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்

உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,

கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,

வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1261)

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு,

ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில்,

கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி

மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1262)

சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்

ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,

ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்

மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1263)

அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த,

கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில்,

கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள்,

மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1264)

உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை

அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில்,

இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்கை

வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1265)

வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க

மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்

பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்

வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1266)

இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்

உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,

குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,

மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

விளக்க உரை

(1267)

மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,

அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,

பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்

எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே.


(1268)

பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை,

வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப,

சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1269)

பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப் பேதியா வின்பவெள் ளத்தை,

இறப்பெதிர் காலக் கழிவுமா னானை ஏழிசை யின்சுவை தன்னை,

சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1270)

திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும்,

படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி

மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1271)

வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை,

அசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை,

திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1272)

தீமனத் தரக்கர் திறலழித் தவனே என்றுசென் றடைந்தவர் தமக்கு,

தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே,

தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே

விளக்க உரை

(1273)

மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,

கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை,

செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.

விளக்க உரை

(1274)

வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,

கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக் கருமுகில் திருநிறத் தவனை,

செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.

விளக்க உரை

(1275)

அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை,

மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை,

தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே.

விளக்க உரை

(1276)

களங்கனி வண்ணா. கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு,

உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை,

தெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே.

விளக்க உரை

(1277)

தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி,

ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,

மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே.


(1278)

மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார்குழையும், தந்தை

கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக் கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்,

நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத் திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்,

சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1279)

பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவுகொண்டபொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி,

பெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும்பேணாநஞ் சுண்டுகந்த பிள்ளை கண்டீர்,

நெல்தொடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல் இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்க ணார்தம்,

சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1280)

படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப்பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்,

அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்துழலு மையன் கண்டீர்,

மடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கல் வீழ மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி,

திடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே

விளக்க உரை

(1281)

வாராரும் முலைமடவாள் பின்னைக் காகி வளைமருப்பிற் கடுஞ்சினத்து வன்தா ளார்ந்த,

காரார்திண் விடையடர்த்து வதுவை யாண்ட கருமுகில்போல் திருநிறத்தென் கண்ணர் கண்டீர்,

ஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி யெங்கும் எழில்மதியைக் கால்தொடா விளங்கு சோதி,

சீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1282)

கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை கதிர்முத்த வெண்ணகையாள் கருங்க ணாய்ச்சி,

முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி கண்டீர்,

மலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி ஆடவரை மடமொழியார் முகத்து இரண்டு

சிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1283)

தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன் அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,

கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,

மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,

தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1284)

பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன்

மங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர்,

கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்,

செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே

விளக்க உரை

(1285)

சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம்

குலுங்க, நிலமடந்தை தனையிடந்து புல்கிக் கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர்,

இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும் ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும்,

சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1286)

ஏழுலகும் தாழ்வரையு மெங்கு மூடி எண்டிசையு மண்டலமும் மண்டி, அண்டம்

மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம் முன்னகட்டி லொடுக்கியவெம் மூர்த்தி கண்டீர்,

ஊழிதொறு மூழிதொறு முயர்ந்த செல்வத் தோங்கியநான் மறையனைத்தும் தாங்கு நாவர்,

சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.

விளக்க உரை

(1287)

சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலை,

கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன் கொடிமாட மங்கையர்கோன் குறைய லாளி

பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்,

சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச் சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே.


(1288)

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி, மன்னு

காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை,

பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட, எங்கும்

தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1289)

கவ்வைவா ளெயிற்று வன்பேய்க் கதிர்முலை சுவைத்து,இலங்கை

வவ்விய இடும்பை தீரக் கடுங்கணை துரந்த எந்தை,

கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த,

தெய்வநீர் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1290)

மாத்தொழில் மடங்கக் செற்று மறுதிற நடந்து வன்தாள்

சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை,

நாத்தொழில் மறைவல் லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்

தீத்தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1291)

தாங்கருஞ் சினத்து வன்தாள் தடக்கைமா மருப்பு வாங்கி,

பூங்குருந் தொசித்துப் புள்வாய் பிளந்தெரு தடர்த்த எந்தை,

மாங்கனி நுகர்ந்த மந்தி வந்துவண் டிரிய வாழைத்

தீங்கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1292)

கருமக ளிலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்

வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை,

பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவி லாத,

திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1293)

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலு மரியும் மாவும்,

அண்டமும் சுடரும் அல்ல ஆற்றலு மாய எந்தை,

ஓண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங் கண்ட,

திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.

விளக்க உரை

(1294)

குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,

நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,

மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்

தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1295)

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும்,

பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய வெந்தை,

பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய,

செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

விளக்க உரை

(1296)

பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும்

கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை,

மூவரி லெங்கள் மூர்த்தி இவன்,என முனிவரோடு,

தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே.

விளக்க உரை

(1297)

திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை

மங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார்,

பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும்

வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே.


(1298)

தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,

நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய்,

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்,

காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே.

விளக்க உரை

(1299)

மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,

விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்

துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,

கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1300)

உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி,

கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரச ளித்தாய்,

பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக்

கருத்தனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1301)

முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து,ஆங்

கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,

சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,

கனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1302)

படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து,

மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,

தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,

கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1303)

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,

பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,

நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,

கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1304)

மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,

மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,

பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்

காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1305)

ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,

காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,

பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,

காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே.

விளக்க உரை

(1306)

சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி,

அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்,

மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை,

கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1307)

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்

காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,

பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,

கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.


(1308)

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,

நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,

திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்

அண்ணா,அடியே னிடரைக் களையாயே.

விளக்க உரை

(1309)

கொந்தார் துளவமலர் கொன்ட ணிவானே,

நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர்,

செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்

எந்தாய்,அடியே னிடரைக் களையாயே.

விளக்க உரை

(1310)

குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,

நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்

சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்

நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே.

விளக்க உரை

(1311)

கானார் கரிகொம் பதொசித்த களிறே,

நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,

தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே.

விளக்க உரை

(1312)

வேடார் திருவேங் கடம்மேய விளக்கே,

நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்,

சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய்,

பாடா வருவேன் விணையா யினபாற்றே.

விளக்க உரை

(1313)

கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,

நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்

செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,

எல்லா இடரும் கெடுமா றருளாயே’

விளக்க உரை

(1314)

கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,

நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,

சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்

மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே.

விளக்க உரை

(1315)

வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,

நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்,

சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்

ஆரா வமுதேஅடியேற் கருளாயே’

விளக்க உரை

(1316)

பூவார் திருமா மகள்புல் லியமார்பா,

நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்

தேவா திருவெள்ளக் குளத்துறை வானே,

ஆவா அடியா னிவன்,என் றருளாயே.

விளக்க உரை

(1317)

நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்

செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை,

கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,

வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே.









Sunday 7 February 2021

சார்வரி வருடம் தை அமாவாசை திருநாங்கூரில் 11 கருட சேவை வைபவம் 12-FEB-2021




 


 நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் தை அமாவாசை (12-FEB-2021) கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளன.


வைணவ சம்பிரதாயத்தில் 'பெரிய திருவடி' என்று பக்தர்களால் அழைக்கப்படும் கருடாழ்வார் மீது இறைவன் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை' எனப்படும். கருட சேவையை தரிசித்தால் பல புண்ணிய பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. 


திருநாங்கூரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இந்தத் திருத்தலத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசையைத் தொடர்ந்து கருட சேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்துக்கான கருட சேவை (12-FEB-2021) உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளன.. ஒரே நாளில் 11 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பதே இதன் சிறப்பாகும். 

12-FEB-2021 மதியம் 1.30 மணியளவில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திருக்கோயில்களிலிருந்து 11 பெருமாள் உற்சவமூர்த்திகள் திருநாங்கூரில் எழுந்தருளினர். ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோயில்),  ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோயில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய பதினொரு திவ்ய தேசங்களைச் சேர்ந்த இறைமூர்த்திகளும் மணிமாடக் கோயில் உள்ள பந்தலில் எழுந்தருள்வார் பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி ஒவ்வொரு பெருமாளிடம் சென்று மங்களா சாசனம் நடைபெற உள்ளன.

இதைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி நடைபெற உள்ளன. திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருள்வார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற உள்ளன. 13.2.21 மாலை திருவெள்ளக்குளம், திருத்தேவனார்தொகை, திருவாலி ஆகிய தலங்களில் திருமங்கையாழ்வார் எழுந்தருள, திருப்பாவை, திருமஞ்சன சாற்றுமறையும் நடைபெற உள்ளன. பின்னர், ஆழ்வார் திருநகரியை அடைந்த பிறகு ஸ்ரீவயலாலி மணவாளன் கருட சேவையும், திருமங்கையாழ்வார் மங்களா சாசனமும் நடைபெறும்.


The uniqueness of this festival is that all the 11 emperumans are giving darshan in garudavahana, Sri. Thirumangai azhwar in hamsavahana led by Sri. Manavalamamunigal in seshavahana in one row through the streets of Thirunangur that cannot be seen anywhere else. Our seven emperumans are part of the 11 emperumans. Please note that the 11 Garuda Seva committee is functioning to meet out the festival expenses. However the below expenses are not covered or covered partially covered by the committee and we seek your financial assistance for our 7 temples.


I request you to select any one of the above item either in part or in full and may send your donation in the name of the T.V.V.S.S.K.TRUST , and mail to 4/83-A, Sri.Purushothama Perumal Koil Street, Nangoor, Sirkali-Tk. You may transfer the funds to trust.

  1. SB A/C No.608801152764, ICICI, Bank, Mailaduthurai Branch, Code No.6088, IFSC Code no.ICIC0006088
  2. SB A/c No.6027064799, Indian Bank, Thenapthi Branch Code No.S108, IFSC Code No: IDIB000S108




Saturday 30 January 2021

ஸ்ரீ சார்ங்கபாணி ஆராவமுதன் திருக்குடந்தை

 


நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்கு மால் வரைக்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே!

நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள்
நாகத்தணை அரங்கம் பேரன்பில்
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கும் ஆதிநெடுமால்
அணைப்பார் கருத்தனாவான்

நின்றதெந்தை ஊரகத்து இருந்ததெந்தை பாடகத்து
அன்று வெஃகணை கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

-துய்ய மதி பெற்ற மழிசைப்பிரான்

Pancha Ranga Kshetram

Sarangapani Koil has maximum number of Azhvaars singing praise of Lord Vishnu after Srirangam and Tirupathi

The 2000 year old Sarangapani Aaraavamudhan temple is housed between two rivers, Cauvery and Arasalaaru, in the heart of Kumbakonam, once the capital of the Chola Kingdom. 3rd Tallest Temple Tower. This temple has the third tallest temple tower among the Divya Desams at 150ft after Srirangam(236ft) and Srivilliputhur(192 ft).


one among the three major shrines dedicated to Lord Vishnu. The largest 11 storey gopuram is 44 meter tall and has the dancing poses of Shiva, a rather unusual feature in a vaishnavite shrine. There are two entrances, uttara vassal – opens when the sun reaches the tropic of Capricorn, in the north and dakshina vassal – opens when the sun reaches the tropic of Cancer, in the south.

http://lh5.ggpht.com/_e9_PKq_dJIQ/Src7ukJ_maI/AAAAAAAABVU/thjVy0TTJV0/Vijaya%20-%20the%20Dwarapalaka.JPG

Some parts of the temple is believed to have been built in the 7th Century AD by the famous Pallava King Mahendra Varma but the real construction of the temple is said to have been done by the Cholas and later renovated by the famous Vijayanagara King Krishnadeva Raaya.



In an effort to test the patience of the Tri-Murthies and in order to find out as to who is most patient, Sage Brigu once kicked Lord Vishnu on the chest. An embarrassed Goddess Lakshmi left the Lord, who in search of her came to Tirupathi. At Tirupathi, the Lord got married to Goddess Padmavathi. To save himself from an angry Goddess Lakshmi, Lord Vishnu is said to have hid inside a small cave here. To this day, one can see a small Sannidhi below the earth inside this temple, near the sanctum sanctorum.


Undertaking penance to repent his arrogant action, Brigu was reborn as Hema Rishi and Goddess Lakshmi was born as his daughter. It is said that Brigu gave his daughter in marriage to Lord Sarangapani.

Compilation of Naalaayira Divya Prabhandham

After listening to the Tamil hymn ‘Aaraavamudhe’(3418-27) composed by NammAzhvaar and totally swarmed by its content ” Aayirathil Ippathe”( 10 verses in 1000), Vaishnavite savant Natha Muni wanted to listen to the 1000 verses of Divya Prabandham. Not knowing where to go to collect the entire Prabandham, Natha Muni is said to have prayed here and Lord Aaraavamudhan asked him to go to Azhvaar Tirunagari, near Tirunelveli, to meet NammAzhvaar and to compile the works of the Divya Prabandham. Having searched for the 1000 verses, Natha Muni actually got to compile all the Nalaayira Divya Prabandham. Being responsible for the compilation of the famed 4000 verses by showing Natha Muni the right direction, the Lord here is also called ‘Aaraavamudha Azhvaar’.

http://lh4.ggpht.com/_e9_PKq_dJIQ/Src6u3fNUFI/AAAAAAAABVE/wAaxg7FxSAc/Ratham%20Diagram%20at%20Sarangapani%20Temple.JPG

Quick Facts:

Deity : Aaraavamudhan – East Facing, Raised Reclining Posture

Goddess : Komalavalli Thaayar

Mangalasaasanam : 7 Azhvaars- PeriyaAzhvaar, PeyAzhvaar, BhoothathAzhvaar, NammAzhvaar, Thirumangai Azhvaar, Thirumazhisai, Andaal,

Paasurams : 52

He is also called ‘Tamizh Vedham Thantha Vallal’.






திருக்குடந்தை ஆராவமுதே!நின்னைக் கண்டேன்

3194. ஆரா அமுதே!அடியேன் உடலம்

நின்பால் அன்பாயே,

நீராய் அலைந்து கரைய வுருக்கு

கின்ற நெடுமாலே,

சீரார் செந்நெல் கவரி வீசும்

செழுநீர்த் திருக்குடந்தை,

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்!

கண்டேன் எம்மானே! 1

திருக்குடந்தைப் பிரானே!நான் என்ன செய்வேன்?

3195. எம்மா னே!என் வெள்ளை முர்த்தி!

என்னை ஆள்வானே,

எம்மா வுருவும் வேண்டு மாற்றால்

ஆவாய் எழிலேறே,

செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்

மலரும் திருக்குடந்தை,

அம்மா மலர்க்கண் வளர்கின் றானே!

என்நான் செய்கேனே! 2

திருக்குடந்தையானே!இறந்த பின்னும் நின் தாளே என் துணை

3196. என்நான் செய்கேன்!யாரே களைகண்?

என்னையென் செய்கின்றாய்?

உன்னால் அல்லால் யாவ ராலும்

ஒன்றும் குறைவேண்டேன்,

கன்னார் மதிள்சூழ் கடந்தைக் கிடந்தாய்!

அடியேன் அருவாணாள்,

சென்னா ளெந்நாள்!அந்நா ளுனதாள்

பிடித்தே செலக்காணே. 3

குடந்தையானே!நின்னைக் காண அழுது தொழுகின்றேன்

3197. செலக்காண் சிற்பார் காணும் அளவும்

செல்லும் கீர்த்தியாய்,

உலப்பி லானே!எல்லா வுலகும்

உடைய ஒருமூர்த்தி,

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!

உன்னைக் காண்பான்நான்

அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி

அழுவன் தொழுவனே. 4

ஆராவமுதே!நான் உன் திருவடி சேரும் வகையை நினை

3198. அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்

பாடி அலற்றுவன்,

தழுவல் வினையால் பக்கம் நோக்கி

நாணிக் கவிழ்ந்திருப்பன்,

செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!

செந்தா மரைக்கண்ணா,

தொழுவ னேனை யுனதாள் சேரும்

வகையே சூழ்கண்டாய். 5

அமுதே!நான் எவ்வளவு நாள்தான் காத்திருப்பேன்?

3199. சூழ்கண் டாயென் தொல்லை வினையை

அறுத்துன் அடிசேரும்

ஊழ்கண் டிருந்தே, தூரக் குழிதூர்த்

தெனைநாள் அகன்றிருப்பன்?,

வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!

வானோர் கோமானே,

யாழி னிசையே!அமுதே!அறிவின்

பயனே!அரியேறே! 6

எந்தாய்!இனிப் பொறுக்கமுடியாது:அடைக்கலம் அருள்

3200. அரியே றே!என் அம்பொற் சுடரே!

செங்கட் கருமுகிலே,

எரியே!பவளக் குன்றே!நாற்றோள்

எந்தாய்!உனதருளே,

பிரியா அடிமை யென்னைக் கொண்டாய்

குடந்தைத் திருமாலே,

தரியே னினியுன் சரணந் தந்தென்

சன்மம் களையாயே. 7

மாயா!என் உயிர் பிரியும்பொழுது நின் திருவடித் துணை வேண்டும்

3201. களைவாய் துன்பம் களையா தொழிவாய்

களைகண் மற்றிலேன்,

வளைவாய் நேமிப் படையாய்!குடந்தைக்

கிடந்த மாமாயா,

தளரா வுடலம் என்ன தாவி

சரிந்து போம்போது,

இளையா துனதாள் ஒருங்கப் பிடித்துப்

போத இசைநீயே. 8

ஆதிமூர்த்தீ!எனக்கு தரிசனம் தா

3202. இசைவித் தென்னை யுன்தாள் இணைக்கீழ்

இருந்தும் அம்மானே,

அசைவில் அமரர் தலைவர் தலைவா!

ஆதிப் பெருமூர்த்தி,

திசைவில் வீசும் செழுமா மணிகள்

சரும் திருக்குடந்தை,

அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்!

காண வாராயே. 9

மாயா!உன்னடிமையாகிய நான் இன்னமும் துன்புறுவேனோ?

3203. வாரா வருவாய் வருமென் மாயா!

மாயா மூர்த்தியாய்,

ஆரா அமுதாய் அடியேன் ஆவி

அகமே தித்திப்பாய்,

தீரா வினைகள் தீர என்னை

ஆண்டாய்!திருக்குடந்தை

ஊரா, உனக்காட் பட்டும் அடியேன்

இன்னம் உழல்வேனோ? 10

இவற்றைப் படியுங்கள்:ஆசைகள் அகலும்

3204. உழலை யென்பின் பேய்ச்சி முலையூ

டவளை யுயிருண்டான்,

கழல்கள் அவையே சரணாக் கொண்ட

குருகூர்ச் சடகோபன்,

குழவில் மலியச் சொன்ன ஓரா

யிரத்து ளிப்பத்தும்,

மழலை தீர வல்லார் காமர்

மானேய் நோக்கியர்க்கே. 11

நேரிசை வெண்பா

அந்தோ!மாறன் தவித்தானே!

ஆரா அமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்

தாராமை யாலே தளர்ந்துமிகத், - தீராத

ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்,

மாசறுசீர் மாறனெம் மான். (48)



Sanctum housed on a Chariot

Lord Vishnu is said to have come down from Vaikuntam in his chariot to marry Goddess Lakshmi here at Kudanthai. The main sanctum has been conceived like a chariot with wheels drawn by horses and elephants and is truly a splendid sight to watch. There are two entrances to the sanctum sanctorum, the southern entrance and the northern entrance (each is open for 6 months in a year). There is no straight entrance to the sanctum. The Utsav moorthy here is regarded with the same importance as the Moolavar.

http://lh4.ggpht.com/_OaVE4JJtHOY/SrYmKOIhvyI/AAAAAAAAAqA/pVZRKjhz3cs/s720/IMG_5501.JPG

As seen in the previous story( Srirangam) Lord Ranganatha had settled down with the Prana Vaakruthi Vimaanam on the banks of Cauvery in Srirangam. The Lord also told Vibheeshana that he would settle down with the Vaidheega Vimaanaam at Kudanthai. Hence, this temple is 2nd only to Srirangam among the Divya Desams.



The Name ThiruKudanthai
Foreseeing some difficult times, Brahmma placed the Vedhic content, nectar and the seeds of creation inside a pot (Kudam in Tamil), which then slipped all the way and down to this place.

Shiva pierced the pot and the nectar flowed in two parts – one into the Mahaamagam Tank and the other into the Lotus Flower Tank. As the nectar flowed into the tank through a pot (Kudam), this place came to be called Thiru ‘Kudanthai’

A visit to this temple, it is believed, will help get rid of one’s past sins, just as a trip to Kasi in the North, would. It is sacred to bathe in the lotus water bed in the temple tank.



Tuesday 26 January 2021

திருமணிமாடம் பத்ரிநாராயணன் பெருமாள் கோயில்


எட்டாந் திருமொழி

நந்தா விளக்கே அளத்தற் கரியாய் நரநா ரணனே! கருமா முகில்போல்

எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று இமையோர் பரவு மிடம்,எத் திசையும்

கந்தா ரமந்தே னிசைபாடமாடே களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,

மந்தா ரநின்று மணமல் குநாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.


முதலைத் தனிமா முரண்தீர வன்று முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய,

விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி வினைதீர்த்த வம்மானிடம் விண்ணணவும்

பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப் பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம்,

மதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.


கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று கொடுமா முதலைக் கிடர்செய்து, கொங்கார்

இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ டணைந்திட்ட வம்மானிடம்,ஆளரியால்

அலைப்புண்ட யானை மருப்பு மகிலும் அணிமுத்தும் வெண்சா மரையோடு,பொன்னி

மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.



சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று திசைநான்கும் நான்கு மிரிய, செருவில்

கறையார் நெடுவே லரக்கர் மடியக் கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்,

முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர் ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்,

மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே!


இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,

தழைவாட வந்தாள் குருந்த மொசித்துத் தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,

குழையாட வல்லிக் குலமாட மாடே குயில்கூவ நீடு கொடிமாட மல்கு,

மழையாடு சோலை மயிலாலு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.


பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக் கிரங்காது, அவள்தன்

உண்ணா முலைமற் றவளாவி யோடும் உடனே சுவைத்தா நிடம்,ஓங்கு பைந்தாள்

கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக் கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து,

மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.


(1224)

தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத் தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்,

இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல் அடிவைத்த அம்மா னிடம்,மாமதியம்

திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று,மூன்றில்

வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.


(1225)

துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம் துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும், முற்றா

விளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம் விளைவித்த வம்மானிடம்,வேல் நெடுங்கண்

முளைவாளெயிற்று மடவார் பயிற்று மொழிகேட் டிருந்து முதிராதவின்சொல்,

வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.


(1226)

விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த விகிர்தா விளங்கு சுடராழி யென்னும்,

படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று இமையோர் பரவு மிடம்,பைந் தடத்துப்

பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத் தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர்,

மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.


(1227)

வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர் மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு,என்றும்

தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன்கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்,

கண்டார் வணங்கக் களியானை மீதே கடல்சூ ழுலகுக் கொருகா வலராய்,

விண்டோய் நெடுவெண் குடைநீழ லின்கீழ் விரிநீ ருலகாண் டுவிரும் புவரே.

 

This is the fifth temple in the Thirunangur cluster. We are visiting the temple of Shri Pundareegavalli sametha Shri Narayanan. The temple is open from 8am to 10 pm and from 5 to 7 pm. The contact numbers are 4364 – 256 424 / 275 689/94439 85843. The theerthams associated with this temple are Indra Pushkarni and Rudra Pushkarni. The sthala vruksham is Jackfruit tree. The temple also follows the Panchrathra system of Thenkalai tradition. There is a belief that Shri Thirukoshtiyur Nambi taught Shri Ramanujar in this temple. This place was earlier called Palasa Vanam.

The Pushkarani is in front of the temple. It is having a five tiered Rajagopuram. It is having two corridors. There is a mandapam on the right side of the gopuram where the Utsava Murthis of all the Thirunangur temples assemble during the Garuda Sevai in the month of Thai (Jan-Feb). The central shrine is in an elevated platform where the Lord is giving darshan in the sitting posture (Irunda Thirukolam) with His leg resting on the Lotus flower. He faces East. This is a rare temple where the sun rays fall on the Lord on all the days. Hence worshipping the Lord on early mornings is considered very auspicious. Thayar shrines are in the outer prakaram.
As per the legends, this is a temple where the Lord is in the Nara Narayana Swaroopam. It means that He teaches to Himself as He is doing in Badrinath. It is also believed Badrinarayanar from Badrinath came to this place to bless Rishi Matangar who was unable to take up the difficult Badri Yatra. Hence though the original name of the Lord is Narayanan, He is called Badrinarayanan. The Utsavar is called by a rare and beautiful Tamil name, Alatharku Ariyan ( One who cannot be measured). This is how Thirumangai Azhwar addressed the Lord. Indra is also believed to have worshipped and got darshan of Lord Narayanar.
The visit of Badrinarayanar is also believed to be at the request of Shiva. Hence the Lord came here in a chariot with the four Vedas as horses and Brahma as the charioteer. Even the temple is in the shape of a chariot and the Pranava Vimanam above the main shrine, is in the shape of OHM and looks like the upper portion of a chariot. Brahma is present at the Feet of the Lord. There is no abhishekam to the Lord; He is anointed only with oil ( Thaila Kaapu in Tamil). In the Moolasthanam, apart from the Moolavar, there are two utsavars- first is Naranarayanar in the standing posture with the Chakra about to be launched pose ( Chakra Prayoga Narayanar) and the second is the Alatharkariyan in sitting posture. This is perhaps the only temple ( I may be corrected) where we can have darshan of three Perumals in one Moolasthanam!
In the olden days, a lamp ( Nanda Vilakku ) was used to be lit and kept at a raised level ( Mani Madam) so that all the nearby areas get light and darkness removed. Similarly, in this temple, the Lord is in a raised platform (Mani Madam) and spreads the Gnana to all those who pray to Him. Hence this temple came to be called Mani Mada Koil. Thirumangai Azhwar’s pasuram starts with the words Nanda Vilakke, Alatharkariyane, Nara Narayanane signifying the glory of this temple.
Since the Lord did not use Garudan when He came here ( He came in the chariot), we would not find the Garudan in front of the main shrine, as is seen in most of the temple. Instead, He is in sitting position under the Dwajasthambam at a level below the Feet of the Lord in the Main shrine. During Garuda Seva, all the other Lords with Their Garudans come to this temple, at the request of this Garudan.
This is an unique temple with a Shiva shrine ( very rarely seen in Vishnu temples) as Vishnu came to pacify Shiva. Shiva is present as Matangeeswarar ( since Sage Matangar worshipped Shiva also in this place) and this shrine faces the main shrine. Note: Photos and some of the inputs were collected from various websites.